Category Archives: Uncategorized

ஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதி (21/09/2017) முதல் ஆரம்பமாகி இன்று ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

when_is_Vijayadashami_in_2014

நவராத்திரி கொண்டாட்டம்: நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூர் சரஸ்வதி கோயில்,வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

c610373d3738363b3dbf39fefb1d09d9--daily-horoscope-maa.jpg

கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பகதர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபம் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். சரஸ்வதி பூஜை: நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.


ஆயுத பூஜை: ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

photos-2014-10-5-13-49-15.jpg

 

IMG_8601.JPG

 

இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.


கல்வி கடவுள் சரஸ்வதி: கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

09-09-16-11-24-05-0

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கயில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

அறுபத்து நான்கு கலைகள்: கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான ஆயுதபூஜை,

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூயஉருப்பளிங்கு போல்வாள் என” உள்ளத்தினுள்ளே இருப்பளிங்கு வாராது இடர்”

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது. சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.


ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம்: தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன.

frm007

இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும். கல்வி தரும் பிற யோகங்கள்:


பத்ர யோகம் : வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும்.

Saraswati-vandana-wallpaper

தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.


புத ஆதித்ய யோகம்: ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும்.

ayudha-pooja-greetings-tamil

அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது. இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று கலை பல கற்று புகழுடன் விளங்குவோமாக!


Read more at: https://tamil.oneindia.com/astrology/news/saraswathi-puja-festivel-worship-goddess-saraswathi-297144.html

 

முள் முருங்கையின் பயன்கள்

முள்முருங்கை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு.

bcef2661f4472ff5f34ac346c31fcd9d13c6a932

இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.

ஒரு தேக்கரண்டி முள்முருங்கை இலைசாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

முள் முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும்.

பத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி பிரசவமான தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.

பெண்களுக்கு நாற்பது வயது நெருங்கும்போது இடுப்பு பகுதி பெருத்துப்போகும். அவர்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும்.

Erythrina-indica--e1459803524991

முள்முருங்கை பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டுவை வேகவைத்து அதில் 30 மி.லி முள்முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும்.

முள் முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

முள்முருங்கை கீரை காய்கறி அங்காடிகளில் கிடைக்கும்.

வடை

  1. முள் முருங்கை இலை-1 கட்டு
  2. மிளகு -1 தேக்கரண்டி
  3. சித்தரத்தை-10 கிராம்
  4. புழுங்கல் அரிசி- 200 கிராம்
  5. உப்பு- தேவைக்கு
  6. எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை:

முள் முருங்கை இலையை நரம்புகள் நீக்கி பிரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவையுங்கள்.

மிக்சியில் மிளகு, சித்தரத்தையை கொட்டி தூளாக்கி, அத்துடன் முள் முருங்கை இலை, புழுங்கல் அரிசியை சேர்த்து சற்று பிசிறாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், எலுமிச்சம்பழ அளவு மாவு எடுத்து வடையாக தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்தெடுக்கவும். இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு இது ஒருவகையில் மருந்தாகவும் செயல்படும். உடல் வலியும் நீங்கும்.

தோசை

  1. முள் முருங்கை இலை-10
  2. புழுங்கல் அரிசி- 200 கிராம்
  3. உளுத்தம் பருப்பு -50 கிராம்
  4. மிளகு -1 தேக்கரண்டி
  5. சிறிய வெங்காயம்-100 கிராம்
    (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
  6. உப்பு-தேவைக்கு
  7. நல்லெண்ணெய்-தேவைக்கு

PGR_1978

செய்முறை:

முள்முருங்கை கீரையின் நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து இலைகளை நறுக்கி வையுங்கள்.

புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.

மிக்சியில் கீரை மற்றும் மிளகை நன்கு அரையுங்கள். தனியாக உளுந்து மற்றும் அரிசியை அரையுங்கள். அத்துடன் அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் உப்பு கலந்து நன்றாக கலக்குங்கள். பின்பு தோசையாக வார்த்தெடுங்கள்.
இந்த மாவை புளிக்கவைக்க வேண்டியதில்லை. அரைத்தவுடன் தோசை வார்க்கும்போது, அதில் சிறிதளவு வெங்காயத்தை நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தோசையை சூடாக சாப்பிட்டால் அதிக சுவை தரும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு இது சிறந்த உணவு. மூட்டு வலிக்கும் ஏற்றது. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சேர்த்து சுவையுங்கள்.

பூரி

  1. முள் முருங்கை இலை-10
  2. கோதுமை மாவு -250 கிராம்
  3. மிளகு தூள்-1/2 தேக்கரண்டி
  4. உப்பு-தேவைக்கு
  5. எண்ணெய்-தேவைக்கு.

thondaikku-itham-navirku-ruchi-thoothuvalai-poori-fb

செய்முறை:

முள்முருங்கை கீரையை சுத்தம் செய்து அரைத்தெடுங்கள்.
கோதுமை மாவுடன், அரைத்து வைத்துள்ள கீரை, மிளகு தூள், உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையுங்கள். மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவில் உருவாக்கி எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். எண்ணெய்யை சேர்க்க விரும்பாதவர்கள், மாவை ரொட்டி போன்று தயார் செய்து, தோசைக்கல்லில் போட்டு வேகவைத்தும் சுவைக்கலாம்.

அட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்?வழங்கலாம்?

அமாவாசைக்குப்பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும்

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார் கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.

தொன்மையான நகரம்

அதற்காக மனம்  தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடைய லாமே. உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே. ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.

தொன்மையான நகரம்

கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால்  மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனை யில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம்  பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்.

இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில்  செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும்.

அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

சங்கர அவதாரம்

கேரளாவில் உள்ளது காலடி தலம். இங்கு சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதிகளுக்குப் பிறந்த வர் ஆதிசங்கர்.

சிறு வயதில் குருகுலத்தில் சேர்ந்தார்.

குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. “பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது.) அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார். என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் கனகதாரா ஸ்தோத் திரம்.

இது 8-ஆம் நூற்றாண் டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன் றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம்.

திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும் அழகைக் காணலாம். ஆலயத்தின் பெயர் கிருஷ்ண அம்பலம் என்பதாகும்.

இவ்வாலயத்தின் உள்ளே வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந் துள்ளன. சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதி யும் சிறப்புடன் அமைத்துள்ளனர். இங்கு ஒரு கல் விளக்கு நிரந்தரமாக ஒளி வீசியபடி உள்ளது. இது ஒரு அணையா தீபம். ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு இவ்வாலயத்தில் தரப்பட்டுள்ள சிறந்த புகழ் சரியானதுதானே.

1910-ஆம் ஆண்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் ஒரு கோவில் அமைத்துள்ளனர். இக் கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தி யாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்

கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம்  செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார். பின் இவ்வாலயத்தை அந்தணர்களிடம் ஒப்படைத்து பூஜை பொறுப்புகளைத் தந்தார்.

ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற் றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட் சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். பல தலைமுறைகளுக்குப் பின் வந்தவர்கள் கோவில் காரியங்களை உதாசீனப்படுத்தியதால், அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினர். கோவில் பூஜையும் சரிவர நடைபெறவில்லை. அதனால் ஆலயத்தில் மனித நடமாட்டம் இல்லை.

விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.

அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண் டார். லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு  நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள்.  அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.

ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம்.

முழையூர்

காசி, விளங்குளம், திருப்பரங்குன்றம், திருச் சோற்றுத்துறை, முழையூர் ஆகிய தலங்களுடன் மேலும் ஒருசில தலங்கள் அட்சய திரிதியை தலங்களாகும். இத்தலங்களில் மிக விசேஷமாகக் கருதப்படும் தலம் முழையூர் சிவத்தலமாகும்.

முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை. இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது.

திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம் இது. எனவே முழையூர் எனப் பெயர் பெற்றது. இந்த ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி இவ்வொலி கேட்டு ஆனந்திக்கின்றனர்.

அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண் ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளித்தால் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். இவ்வாலய லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம். கோஷ்ட மூர்த்திகள் இங்கு இறைவன் அருகிலேயே அமைந்துள்ளனர். இங்கு குபேர பூஜை செய்வது சிறப்பு.

காசி

அன்னபூரணி  தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது.

விளங்குளம்

சனியின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் விளங்குளம் என்ற கிராமத்தில் உள்ளது. ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான்.

இத்தலத்தில் அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

குபேரலிங்கம்

திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம்.  இத்தலத்தில் ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.

திருக்கோளூர்

நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. இத்தல பெருமாள் மரக்காலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

சுவர்ண கௌரி விரதம்

கர்நாடக மாநிலப் பெண்கள் அட்சய திரிதியை அன்று சுவர்ண கௌரி விரதம் கடைப்பிடிப்பர். அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயக ரும் வருவதாகவும் நம்பப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கோதுமையில் இனிப்புகள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள்.

அட்சய திரிதியை தான பலன்கள்

தயிர்சாத தானம்- ஆயுள் கூடும். இனிப்புப் பண்ட தானம்- திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம்- விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம்- வாழ்வை வள மாக்கும். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.

தூங்காநகரம் – மதுரையின் சிறப்புகள்

தொன்மையான நகரம்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும்.  இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது.

சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பாண்டிய நாடு

பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார்.

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

மதுரையினு சொன்னா மீனாட்சி அம்மன் ,ஜல்லிக்கட்டு,ஜிகிர்தண்டா,மல்லி தான் நம்ம நினைவுக்கு வரும் வாங்க அத பத்தி பார்போம்!

மீனாட்சி அம்மன்

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.

1373351457458image

இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.

madurai-03

மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

சித்திரைத் திருவிழா

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.

மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.

நிகழ்வுகள்

11-1460344008-cithirai-festival

திருவிழாவின் முதல் நாள்  நிகழ்வு கொடியேற்றம் ஆகும். அன்று இரவு கற்பக விருட்சகம் மற்றும் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. அடுத்த நாள் பூதவாகனம் மற்றும் அன்ன வாகனதிலும், மறுநாள் கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனதிலும் வீதி உலா வரும். நான்காம் நாள் தங்கபல்லக்கிலும் ஐந்தாம் நாள் தங்க குதிரையிலும் எடுத்து செல்வார்கள்.

ஆறு மற்றும் ஏழாம் நாள் முறையே ரிஷப வாகனம், நந்தீஸ்வரர் வாகனம் மற்றும் யாழி வாகனத்திலும், எட்டாம் நாள் பட்டாபிசேகம் நடைபெறும். இரவு வெள்ளி சிம்மாசன வாகனம் சுவாமி உலா வருகிறது.திக்விஜயம் மீனாட்சி இமயமலை சென்று போர் புரிவதை கூறும் வகையில் நடைபெறுகிறது.அன்று இரவு இந்திரா விமான வாகனம்.


மீனாட்சி திருக்கல்யாணம்

jp-03

பத்தாம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். அன்று இரவு யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கு வாகனம் சுவாமி உலா வருகிறது

தேரோட்டம்

main-qimg-5627e25c614cdf3410e7793ef9e2b87b-c

திருக்கல்யாணம் முடிந்ததும் மறுநாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.தேரோட்டம் ஆனது நான்கு மாட வீதிகளிலும் அம்மன் மீனாட்சி சுந்தரேசுவரருடன் பவனி வருவார்.

அழகர் அவதாரம் தரித்த விஷ்ணு தன் தங்கையான மீனாட்சி திருமணதிற்கு அழகர் கோவிலில் இருந்து மதுரை நகருக்கு புறப்படுகிறார்.கள்ளர்களிடமிருந்து சீர்வரிசையை காக்க நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கிளம்பி வருவார் (அதனாலே அவர் கள்ளழகர்).

வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாட்டு மதுரை அனைத்தும் ஒலிக்கும். அந்த பாடலின் இடையில் வரும் இசை அனைத்து மக்களையும் ஆட செய்யும். வரும் வழியில் ஒவ்வொரு மண்டபமும் மக்களுக்கு ஊண் அருளழித்து வருவார்.

madurai-kallalagar-1

கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலை அட்டைகிறார். இரவு முழுவதும் அங்கு உள்ள அணைத்து மண்டபகளிலும் பக்தர்களுக்கு அருளளிப்பார் .

எதிர் சேவையின் போது அழகர் அணிய, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

மதுரை வைகை நதிக்கரையை அடைந்தத அழகரிடம் தங்கள் தங்கை திருமணம் முடிந்துவிட்டதே இபொழுதான் வருகிறீர்கள் என கூடலழகர் பெருமாள் தெருவிக்கிறார். அதை கேட்ட அழகர் தான் கொண்டுவந்த சீர் வரிசைகளை கூடழகர் பெருமாளிடம் கொடுத்துவிட்டு வைகை நதியில் இறங்கிவிட்டு திரும்புகிறார்.


அழகர் ஆற்றில் இறங்குதல்:

evening-tamil-news-paper_81875246764

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீட்சுதல் நிகழ்வு. அழகரை வேண்டி பக்தர்கள் 15 to 20 நாட்கள் விரதம் இருந்து வேண்டுவார்கள். தான் வருவதற்க்குள் தன தங்கை திருமணம் செய்துகொண்டால் எனும் கோபத்தை தணிக்கவும், அழகர் மீது உள்ள தீட்டினை கழிக்கவும் தண்ணீர் பீச்சும் நிகழ்வு உள்ளதாக கூறப்படுகிறார்கள்.

kallalagar-in-vaigai-images-jpg-12

ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. தண்ணீர் பிட்சுபவர்கள் ஒவ்வெரு பகுதியல் இருந்தும் கூட்டமாகவே வருவார்கள்.அதில் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்களுக்கு ஆடுவார்கள்.அவற்றை காண மட்டுமே திருவிழா போக ஆசை ஏற்படும்.பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.

மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும்.

பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முத்தங்கி, மச்சம், கூர்மம், வாமன, ராம, கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட தசாவதாரத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளிபார். பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வாரிபுரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார். இறுதியாக அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.


வரலாறு :

லட்சகணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இவ்விழா 400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது.அப்போது மீனாட்சி சுந்தரர் திருமணத்தை மட்டுமே கொண்ட இந்த விழா சைவர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்பட்டது.அன்றைய காலத்தில் சோழவந்தன் எனும் இடத்தில் தான் நடந்தது.பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில், சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு, திருக்கல்யாணத்தோடு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இணைக்கப்பட்டது.

சைவ மற்றும் வைணவ சமயங்கள் ஒன்றாக கொண்டாடும் திருவிழா இதுவே ஆகும்.

புராணக் கதையின் படி, மலையத்தவ பாண்டியன் மற்றும் ராணி காஞ்சனமாலாவின் மகளாக அக்னியில் தோன்றினாள் மீனாட்சி.சிறு வயது முதலே போர் கலைகளில் சிறந்தவளாக திகழ்ந்து உலகின் எல்லா பகுதிகளையும் வெற்றி கொண்ட மீனாட்சி, இறுதியாக கயிலாயம் சென்று சிவபெருமானுடன் போரிட்டார்.அக்கனமே அவர் மேல் காதல் வயப்பட்டு, தான் பார்வதியின் அவதாரம் என்பதையும் உணர்ந்துக் கொள்கிறார்.

madurai-meenakshi-amman2

தன் அவதாரத்தின் காரணத்தை அறிந்த சக்தி ஈசனின் கரம் பிடிக்க வேண்டுகிறாள். சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி க்கு திருமணம் நிச்சம் செய்யப்படுகிறது பின் இத்திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது.மீனாட்சியை திருமணம் செய்த பிறகு மதுரையை ஆளும் செங்கோல் சுந்தரேஸ்வரரிடம் கொடுக்கப்படுகிறது. பாண்டிய நாட்டை ஆளுவதால் சுந்தரபாண்டியன் எனும் பேரால் குறிப்பிடுகிறார்.இதனோடு திருவிழா முடியும்.ஆனால் அக்காலத்தில் இடம்பெற்ற சைவ வைணவர்களின் மோதல்களை தவிர்க்க முயன்று ஒரு புனைவு கதை சேர்க்கப்பட்டது.

தன் தங்கை திருமணத்திற்க்கு செல்லும் அழகர், திருமணம் முடிந்தது என்று தெரிந்ததவுடன், வைகை நதியில் இறங்கி திரும்புவதாக இந்த புதிய புராண கதைகள் சொல்கிறது. இன் நிகழ்வு நடைபெருவதற்கான காரணம் மண்டூக ரிஷி அவர்களின் சாப விமோசனம் தருவதற்காக என கூறப்படுகிறது.

ஒரு முறை மண்டூக ரிஷி நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொது துர்வாச முனிவர் அங்கு வருகிறார்.அவர் வருவதை காணாத மண்டூக ரிஷியை, தன்னை அவமதித்து விட்டார் என துர்வாச முனிவர் மண்டூகருக்கு வைகை நதியிலே நீ தவளையாக இருப்பாயாக என சாபம் விடுகிறார். அவரது சாப விமோச்சனம் போக்கவே கடவுள் விஷ்ணு அவதாரம் எடுத்து வருவதாக இந்நிகழ்வு கூறப்படுகிறது.


சிறப்புகள் :

அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை நோக்கி வரும் வழயில், மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வருகிறார். வைகயில் அழகர் இறங்கும் முன் விசிறி, குடை முன்னே வரும். விசிறி மற்றும் குடை யை அடையாளம் கண்டு அழகர் வரவிருக்கிறார் என்றே கூரலாம்.”சாமி இன்னிக்கு எங்க இருக்குது” என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால், அழகர் வாய்கால் அளவுள்ள நீரில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

madurai_alagar-6

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில்.அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கவே. அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்.

பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும்.

இந்த திருவிழாவிற்க்கு வெளி மாவட்டங்களில் இருந்ததும் பல லட்ச பக்தர்கள் வருவார்கள்.அழகரை கண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா என்ற முழக்கம் அனைவரையும் ஆர்பரித்துவிடும்.இத்திருவிழாவின் போது மதுரை தமுக்கம் மைதானத்தல் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சிறப்பு வாய்ந்தது. கோடை விடுமுறையின் போது இவ்விழா கொண்டாடப்படுவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.


திருகல்யாணத்தின் போது தினமும் மாலை சாமி வீதி உலா செல்லும் முன் கிராமிய நிகழ்சிகள் நடைபெறும். சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம், அனுமன்ஆட்டம், கருப்புச்சாமியாட்டம், தெய்வங்களைப் போல் மாறுவேடம் அணிந்து ஆடி வருவார்கள். மேலமாசி வீதி முருகன்கோயில் அருகே பூக்கொட்டும் பொம்மைககள் மற்றும் மாலையிடும் பொம்மைகளை காணப்படும்.

திருவிழாக்களின் நோக்கமாக அமைவது, ஒற்றுமை. நண்பர்கள் உறவினர்களிடம் என்னதான் பிரச்சினை இருந்தாலும் பண்டிகை என்றவுடன் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவர். அதிலும் சித்திரை திருவிழா பல நாட்கள் நடைபெறுவதாலும், கோடை விடுமுறையாலும், வெளி ஊரில் இருக்கும் சொந்தங்கள், சிறுவர்கள் வந்து தங்கி திருவிழாவை கொண்டாடுகின்றனர். தற்போதையா நவீன வாழ்க்கையில் இவை போன்ற திருவிழா தான் நம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.இது ஒரு இந்து சமய திருவிழா மட்டுமல்ல சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய தமிழ் சமூக விழா, பெருமைமிகு சித்திரை திருவிழா ஆகும்.

திருவிழா நகரம்

மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும்.

tamilnadu_madurai_vandiyur-mariamman-teppakulam-temple-in-madurai

இதில் முக்கியமான திருவிழாக்கள் வண்டியுர் மாரியம்மன் தெப்ப திருவிழா ,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆவாணி திருவிழா ஆகியவை அடங்கும்

ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு)

மதுரை மக்களின் வீரத்தோடு தொடர்புடையது ஏறுதழுவுதல்

B_Id_196097_pic9

மதுரையில் ஆண்டுத்தோறும் நடைபெறும் அலங்கங்நல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.

539015-jallikattu2-afp

இது தவிர மதுரையை சுற்றியுள்ள ஊர்களிலும் பொங்கல் பண்டிக்கையின் போது மிகச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும்.

ஜிகிர்தண்டா

readmore

மதுரைக்கு மல்லி மட்டும் பேமஸ் இல்லிங்க ஜிகிர்தண்டா தான் இப்போ ரெம்ப பேமஸ் அதுலயும் ந்ம்ம கீழவாசல் ஜிகிர்தண்டா சும்மா தெறிக்கவிடும்.


பொழுதுபோக்கும் இடங்கள்

lost_world_of_tambun

நம்ம மதுரையில் அதிசியம், ராஜாஜி பார்க், எகோ பார்க், தங்கரீகல்,சினிபிரியாகாம்பிளாக்ஸ் ,

2016-07-06.jpg

வெற்றி,ஐநாக்ஸ்,பிக் சினிமாஸ், அபிராமிகாம்பிளாக்ஸ்,அம்பிககாம்பிளாக்ஸ் போன்றவைகள் உள்ளன.

புதுவரவு

vishalmall

விசால் டி மால் என்ற மிகப்பெரிய ஸாப்பிங் மால் உள்ளது.

inox-theaters

இதில் அதி நவீன தொழில் ஐநாக்ஸ் திரை அரங்கம் உள்ளது மேலும் பல்வேறு பொழது போக்கு அம்சங்கள் இருக்கின்றன.

The Chennai Silks Mega Showroom opened in Madurai

தி சென்னை சில்கஸ் ,போத்திஸ் ,ஏகே அகமத், போன்ற மிகபெரிய ஜவுளி மாளிகை உள்ளது

ஹோட்டல்

நம்ம மதுரையில் தான் எத்தன மணிக்கு போன கூட சாப்பாடு கிடைக்குமிடம்.

அதனால தான் அதற்கு தூங்க நகரம் பெயர் வந்தது பல உணவகங்கள் இருந்தாலும் குறிபிட்ட சில சிம்மக்கல் கோனார் கடை,,அம்மா மெஸ்,மாட்டுதாவணி மெரினா,சபரி,பெல் போன்றவை சிறந்த உணவகங்கள் ஆகும்.


தூங்காநகரம்

உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் ‘தூங்காநகர்’ ஒன்று தமிழகத்திலுள்ளது. அந்நகர் எதுவென உங்களுக்குத் தெரியுமா? ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால், திருவிழாநகர் என்னும் பெருமை பெற்ற நகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் கோயில் மாநகர் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப் புகழ்பெற்ற நகருக்கு நீங்கள் சென்றது உண்டா? சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் எதுவெனத்தெரியுமா? இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம்.

எனவே நானும் மதுரைக்காரன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது


சனிகிழமை அன்று ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (Benifits Of Saturday Oil Bath)

சனிக்கிழமை

சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு எனகுறிப்பிட்டிருக்கிறார்.

நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

          ஒருசிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர்.

அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிரானி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாருகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைதான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர்.

oilbath-600-01-1491030610.jpg

இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைதான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கிய்த்திற்க்கும் நல்லது என்கின்றனர்.

       சரி. மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள்.

வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும். மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

கட்டுரையின் முடிப்பதற்கு முன் ஜோதிட ரீதியான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.
முதலில் சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான? எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியளைதான் குறிக்கிறது.

அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது.

உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியள் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க
ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது?

download.jpg
சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம்.
மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

            நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள்:

1. சனி தோஷம் விலகும்.
2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள்.

Continue reading சனிகிழமை அன்று ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (Benifits Of Saturday Oil Bath)

15 SPECIAL PLACES IN KODAIKANAL (கொடைக்கானலில் பார்க்க 15 சிறந்த இடங்கள் )

கொடைக்கானல் :

கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்

                   முதலில் நாம் கொடைக்கானல் பற்றி பார்க்கலாம் !!!

கொடைக்கானல் – மலைகளின் இளவரசி

grt-nature-trails-kodaikanal-facade-54660115140g

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Kodaikanal Sightseeing Photos

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும்.

17350_8806

முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.

                கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :

வெள்ளி நீர்வீழ்ச்சி:

silvar-falls

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும்.

kodaikanal-lake

1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.

44696kodai-boating

இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட்.

dc-ooty-26a_0

இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.

botanical-garden-ooty

150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

kod-coakers-walk

வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).

டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

dolphin-nose

இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.

பசுமை பள்ளத்தாக்கு (suicide point) :

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு.

kodaikanal-suicide-point-ghost-2

இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு

தலையர் நீர்வீழ்ச்சி:

thalaiyar-falls

இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.

556369633thalaiyar_falls_main

இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:

guna1

கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.

அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil’s kitchen) என்றழைக்கப்பட்டது

இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.

குறிஞ்சி ஆண்டவர் ஆலயம்

kurinji-andavar-temple

கொடைக்கானல் பூம்பாறை குறிஞ்சி ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது . கொடைக்கானல் செல்லும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய தலங்களில் ஒன்று.

Pine forest:

pine_tree_forest_kodaikanal

இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.

pine-forest

கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி(Bear shola Falls):

Bear-Shola-Falls3.jpg

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.

Kodaikanal solar observatory:

Kodaikanal_Solar_Observatory-a.jpg

கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

amazing-view-of-vaigai-dam-at-night3-jpg

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும்.

Kodai-3.jpg

இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.

திறந்திருக்கும் நேரம் (Timing)

காலை 10 மணி – மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி – 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

pillar-rocks-kodaikanal

இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

பாம்பர் அருவி:

pampar-falls305939770pambarfalls_main

இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

shembaganur-museum

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.

மனிதர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கொடைக்கானல் சென்று மலையின் இளவரசியை தரிசனம் செய்துவாருங்கள்

மகா சிவராத்திரி (அன்று எதற்காக கண் விழிக்க வேண்டும்)

நான்கு கால பூஜைகளில் என்னென்ன அபிஷேகம் நடக்கும் தெரியுமா?

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும்.

7b9ea6da4473712dd12315557f390742

மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.

maxresdefault

மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை

மகா சிவராத்திரி

மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும்.

மஹாசிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும், இதில் பங்கேற்று இறைவனை வழிபட வேண்டும்.

சிவராத்திரி நான்கு ஜாம பூஜைகள்

சிவராத்திரி தினத்தன்று சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும்.

maxresdefault-1

சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது லிங்க தரிசனம் செய்தல் மற்றொரு முக்கிய விதியாகும்.

முதல் ஜாமம் அபிஷேகம்

பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.

இரண்டாம் ஜாம அபிஷேகம்

சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.

மூன்றாம் ஜாமம் அபிஷேகம்

original

தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.

நான்காம் ஜாமம் அபிஷேகம்

கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம். சிவபூஜை விதி தவறாமல் நான்கு ஜாமத்தும் ஜாமத்திற்கு ஒரு முறையாகப் பூஜை செய்ய வேண்டும்.

கண் விழித்தால் புண்ணியம்

அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும். மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும் தான தருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.

புராண கதை

4eab975b6d663bdc3e74bab55552c09e.jpg

முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார். ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

உலகதாய்மொழி தினம் – நம்ம தமிழ்நாட்டில்

மதுரை பாஷை

   பொட்ட புள்ளங்க சூதானமா இருங்கப்பு… மதுரையின் பாசமான பாஷை

உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் இந்த நாளில் நான் பிறந்து வளர்ந்த என் மதுரை மண்ணின் பாசமான வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முரட்டுத்தனமாக கரடு முரடாக இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசம் இழையோடுவதை உணர முடியும்.

1373351457458image

மதுரைக்காரவங்க ஒண்ணு கூடினா போதும் அங்கே அவர்கள் பேசும் பாஷையை கேட்க கேட்க ஒருவித நேசம் இளையோடும். வயது மூத்த ஆண்களைப் பார்த்தால் அண்ணே… என்றும் பெண்களை அக்கா என்றும் ஒருவித ராகக்தோடு அழைப்பதை கேட்க முடியும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவித நேசம் இழையோடும், கோபப்பட்டாலும் குணத்தோடு பேசுவார்கள் மதுரை மண்ணின் மக்கள்

tamilnadu_madurai_vandiyur-mariamman-teppakulam-temple-in-madurai

என்னத்த அங்கிட்டு பாத்துக்கிட்டு… இங்கிட்டு வா… என்ன நின்டு போயிர போவுது… பய்ய போலாம் ஒண்ணும் கொறஞ்சு போயிறாது என்பார்கள். வெள்ளனெ வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன்… ஆனா அசந்துட்டேன்… விடிஞ்சிருச்சு. உசக்க தலைய தூக்கி பாக்கறேன் சாவல காணோம் என்பார்கள். பொட்டப்புள்ளங்கள பாத்து பல்ல காட்டாதீங்க… வஞ்சி புடுவாங்கடா…அவங்க பேச மாட்டாங்க அப்புறம் அருவாதாண்டா பேசும் என்று எச்சரிப்பார்கள். என்னத்த பெறாக்கு பாத்துக்கிட்டு சோலிய பாப்பியா… கோளார இருக்கணும்பா… என்று ஒருவித சூதானத்தோடு பேசுவார்கள். அவிங்க வந்தாய்ங்களா? எங்கிட்டு போனாய்ங்க? ஒரு லக்குல நிக்க மாட்டமா திரியிறாங்க என்பார்கள். ஒரே அலப்பறையா இருக்கேப்பா.. லந்த குடுத்திருச்சு அந்த புள்ள என்று அசால்டாக சொல்வார்கள் இளவட்டங்கள். இப்படியே பேசிட்டு இருந்தா ஏழ்ரய கூட்டிருவாணுங்க… ஆட்டும் அப்றம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டே இருப்பார்கள் மதுரைக்கார மண்ணின் மைந்தர்கள். தாய்மொழி தினத்தில் எனக்கு தெரிந்த என் மதுரை மண்ணின் பாஷையில் இருந்து சில வார்த்தைகளை எழுதியுள்ளேன். மதுரை மக்களே நீங்களும் உங்க பங்குக்கு எழுதுங்கப்பு.

கோவை பாஷை

     இல்லீங்… என்ட்ர ஊரு கோயமுத்தூருங்கோ… மயக்கும் கொங்குத்தமிழ்

 உலக தாய் மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் இயல்பான மரியாதையோடு தவழ்ந்தாடும் கோவை பாஷை குறித்த சில சுவாரசிய தகவல்கள் தமிழக மக்கள் தமிழ் மொழியே பேசினாலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு.

Coimbatore.jpg

நெல்லைக்கு ஏலே

அவர்கள் பேசும் பாஷையும் வித்தியாசமானது. சென்னை என்றால் இன்னா? நெல்லைக்கு ஏலே.. கோவைக்கு சென்றால் ஏனுங்க, இல்லீங், அம்மணி என ஒவ்வொரு மண்டல மக்களும் தங்களுக்கான பாஷையில் அள்ளி தெளிப்பார்கள்.

மரியாதை கலந்த கோவை பாஷை கொங்கு மண்டலத்துக்குள் வரும் கோவையில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும். கோவை மக்கள் பேசும் சாதாரண வார்த்தைகளிலேயே இயல்பான மரியாதை கலந்து மண் மணம் வீசும்.

courtallam-mainfalls

வெள்ளந்தி தனத்தைக் காட்டும் கோவை பாஷையில் மரியாதை மட்டுமின்றி அன்பும் கலந்தே இருக்கும். அவர் கேள்வியாகட்டும் அல்லது பதிலாகட்டும் அந்த பாஷையே ஒரு வெள்ளந்தி தனத்தைக் காட்டும்.

ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? முன்பின் தெரியாதவர்களின் பேச்சில் மண் மணம் தெரிந்தால் போதும் ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? என கேட்பதிலேயே எதிரிலிருப்பவர் விழுந்து விடுவார் அப்படி ஒரு சிறப்பு பெற்றது கொங்கு மண்டலத்தின் கோவை தமிழ்..
கோவை சரளாவின் வட்டார மொழிவளம் கோவை தமிழ் உச்சரிப்புகளை ரசிக்காது காதுகள் இருக்காது. எத்தனையோ காமெடி நடிகைகள் இருந்தும் கோவை சரளா இன்றளவும் மார்க்கெட்டில் இருப்பதற்கு அவரின் வட்டார மொழிவளமே காரணம் என்பது யாரும் மறுக்க முடியாது.

சென்னை  பாஷை

துன்னு.. குந்து.. இஸ்துகினு.. சென்னை செந்தமிழ்… அழகு தமிழ்

 சென்னை மொழி பேசுவதற்கு அலாதியான மொழி. நல்ல அழகான தமிழ் சொற்கள் விரவிக் கிடக்கும் மொழி சென்னை செந்தமிழ். அய்ய இன்னா.. என்று சாதாரணமாக சொல்லிவிட்டால் கூட போதும். உடனே எதிரில் இருப்பவர் இளக்காரமான ஒரு பார்வை பார்த்து கேட்பார்கள் நீ என்ன மெட்ராசா.. என்று. அவ்வளவு மரியாதை சென்னை செந்தமிழுக்கு..

21-1487681726-chennai-central-railway-station1-600.jpg

சென்னையில் வந்து கால் பதிக்காத அயல்நாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். டச்சு, போர்ச்சுகல், பிரெஞ்சு, இங்கிலாந்து, ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் அரேபியர்கள், சீனர்கள் என யார் வந்தாலும் சென்னையை தொடாமல் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். வங்காள விரிகுடாவின் விரிந்த பகுதியைக் கொண்டது சென்னை என்று.

மத்தவங்க பாஷை இத்தனை நாட்டுக்கார்கள் சென்னைக்கு வந்து சென்றதும், ஆட்சி செய்து சென்றதும் போனதால் ல் பல மொழிச் சொற்களை சென்னையில் கலந்திருக்கும். அதனையும் தமிழ் போலவே பாவிப்பார்கள் சென்னை தமிழர்கள். அது வேறுமொழி சொல் என்பது அவர்களுக்கு தெரியாததுதான் இந்த மொழியின் சிறப்பே.

துன்னு..

373727-pti-chennai-metro-ed

பாத்துகினு நிக்கிற துன்னு.. என்று தெரு முனையில் இட்லி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்லியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். துன்னு என்பதை கேட்டாலே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பலருக்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் வாந்திதான் வரும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். துன்னு என்பது ‘தின்’ என்ற அழகிய தமிழ்ச் சொல்லின் வழக்குச் சொல். “என்னை தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன் என்று வைரமுத்து கவிதையை ‘டுயட்’ திரைப்படத்தில் பிரபு வாசித்தால் கை தட்டி ஆராவாரம் செய்பவர்கள் சென்னைக்காரர் சொன்னால் சிரிக்கிறார்கள். என்ன செய்ய?

குந்து..

ஊட்டுக்கு வந்ட்டு நின்னுனுகிற.. குந்து.. என்று சொல்லிவிட்டால் போதும், என்ன உட்கார் என்று சொல்லம்தானே என்பார்கள். தாய் மொழி என்பது தானாய் வருவது. உட்கார் என்ற சொல்லை விட இலக்கிய தரமும், அழகும் கொண்டது குந்து என்ற சொல்.. அதனால்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.-  

அனைவருக்கும் உலகதாய்மொழி தினம் வாழ்த்துகள்

நன்றி one india tamil படித்ததில் பிடித்தது

தமிழ்நாட்டில் புது IPL HERO டி.நடராஜன் (வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்)

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நாடராஜன்தான் இப்போது டாக் ஆப் தி டவுன். அனைத்து ஊடகங்களும் இப்போது அவர் வசிக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்தை சுற்றி வருகின்றன. இத்தனைக்கும் காரணம்,

maxresdefault

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர், ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். சர்வதேச கிரிக்கெட் ஆடாத உள்ளூர் ஆட்டக்காரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இது நடராஜனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். பஞ்சாப் அணிக்காக ஆடப்போகிறார் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலியில் அவர் தனது திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம்.

வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்.. ஐபிஎல் ஹீரோ நடராஜன் வாழ்க்கை, இளைஞர்களுக்கு பாடம்

21-1487652953-natarajan-cricketer45

டென்னிஸ் பந்து வீரர்

டி.நடராஜன் என்று அறியப்படும் இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரின் முழுப்பெயர் தங்கராசு நடராஜன். வளர் இளமை காலங்களில், கிராம அளவில் டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். டென்னிஸ் பந்தை கொண்டே பேட்ஸ்மேன்களை அவர் திணறிடிக்கும் திறமை அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆசையை சுடர்விடச் செய்தது.

21-1487652976-karthick-naren-677.jpg

சென்னை கொடுத்த திருப்புமுனை

சொந்த ஊரிலேயே இருந்தால் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட நடராஜன், சென்னை வந்தடைந்தார். சென்னையில்தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும், கார்க் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

சர்ச்சை

இரண்டே ஆண்டுகள்தான். அதற்குள்ளாக நடராஜனின் திறமை காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக, சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

21-1487652953-natarajan-cricketer45

சோதனையை வென்று சாதனை

சோதனையான அந்த காலகட்டத்தில், பந்து வீச்சு ஸ்டைலை மாற்றி சிறப்பாக பந்து வீச நடராஜனுக்கு உதவியது, முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியம் ஆகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20யில்

lakshmipathy_balaji-500x400.jpg

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு ஐடியாக்கள் கொடுத்து மெருகேற்றினார்

ஐபிஎல் ஹீரோ

images-2

தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐபிஎல் 2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் ஆட உள்ளார். சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச வேண்டிய சூழ்நிலை அப்போது ஏற்படும், சர்வதேச தரம்வாய்ந்த பவுலர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும். இதன் மூலம், நடராஜனின் ஆட்டத் திறன் மேலும் மெருகேரும் என நம்பலாம். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அனேகமாக பஞ்சாப் அணி நடராஜனை இந்த சீசனிலேயே களமிறக்கும் என நம்பலாம்

கோடிகளின் பூஜ்யம் தெரியாது

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “நான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளது பற்றிதான் யோசித்துக்கொண்டுள்ளேன். கிடைத்துள்ள பணத்தை பற்றியல்ல. உண்மையை சொன்னால் 3 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம், எனது கிரிக்கெட் திறமை மேம்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தினக்கூலி தொழிலாளி

21-1487653139-natarajan-ipl4

நடராஜன் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாகும். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் ஆடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

நடராஜன் கனவு

“எங்கள் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்ட வேண்டும். எனது சகோதர சகோதரிகள் இன்ஜினியரிங், சார்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம், இப்போது கிடைத்துள்ள பணம் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் நடராஜன். வாழ்க, வளர்க. நீங்களும் வாழ்த்தலாமே.